உணர்வுகளின் வரலாற்றை எழுத்தில் தந்த பெலாரஸ் பெண்ணிற்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு





2015 ஆம் ஆண்டிற்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெலாரஸ் நாட்டைச் சேர்ந்த பெண் எழுத்தாளரான ஸ்வெட்லானாவிற்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

படைப்பிலக்கியத் துறையில் உலகளாவிய சாதனை படைத்ததற்காக, ஐரோப்பிய நாடான பெலாரஸ் நாட்டைச் சேர்ந்த பெண் எழுத்தாளர் ஸ்வெட்லானா அலெக்ஸீவிச்சுக்கு (வயது 67) இந்தப் பரிசு வழங்கப்படவுள்ளது.

இதை ஸ்வீடன் நாட்டின் ஸ்டாக்ஹோம் நகரில் நோபல் பரிசு குழு நேற்று (08) அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

‘‘நமது காலத்தின் பாடுகள் மற்றும் துணிச்சலுக்கான நினைவுச்சின்னமாக இவரது பல குரல் கொண்ட எழுத்துக்கள் ஒலித்துள்ளன’’ என நோபல் விருதுக்குழு தெரிவித்துள்ளது.

இவர் கடந்த 40 ஆண்டுகளாக சோவியத் மக்கள் மற்றும் சோவியத்திற்கு பிந்தைய காலகட்ட மக்களின் வாழ்க்கை முறையை ஆராய்ந்து பதிவு செய்து வந்துள்ளார்.

உக்ரைனில் உள்ள செர்னோபில் அணு உலை விபத்து துயரம், ஆப்கானிஸ்தான்– சோவியத் போர் போன்றவற்றின் இவரது பதிவுகளை உதாரணமாகக் கூறலாம்.

குழந்தைகள், பெண்கள், ஆண்கள் என பல்லாயிரக்கணக்கானோரை பேட்டி கண்டு, நாம் அறிந்திராத நிகழ்வுகளை தந்திருக்கிறார்.

அதேவேளை, இவர் உணர்வுகளின் வரலாற்றையும், ஆன்மாவின் சரித்திரத்தையும் தந்துள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் நோபல் பரிசினை வென்ற 14 ஆவது பெண் என்ற சிறப்பையும் இவர் பெறுகின்றார்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.