கோத்தபாய ராஜபக்ஸ ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன் ஆஜர்




முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ இன்று பாரிய நிதி மோசடிகள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன் ஆஜராகினார்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது ரக்னா லங்கா நிறுவனத்தின் ஊழியர்களைத் தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்திய சம்பவம் தொடர்பில் சாட்சியம் பெற்றுக்கொள்வதற்காக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் இன்று அழைக்கப்பட்டதாக ஆணைக்குழுவின் செயலாளர் லெசில் டி சில்வா தெரிவித்தார்.

ரக்னா லங்கா நிறுவனத்தின் கணக்காய்வாளர்கள் இருவரிடம் சுமார் 3 மணித்தியாலங்கள் வரை விசாரணை நடத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.