நிலக்கீழ் மாளிகை எனது தேவைக்காக அமைக்கப்படவில்லை: மஹிந்த






ஜனாதிபதி மாளிகையில் அமைக்கப்பட்டுள்ள இரகசிய நிலக்கீழ் மாளிகை தமது சொந்த தேவைக்காக அமைக்கப்பட்டதல்லவென, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

குறித்த கட்டிடம், ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களின் பாதுகாப்புக்காக அமைக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், யுத்த காலத்தில் பாதுகாப்பு குழு கூட்டத்தையும் குறித்த நிலக்கீழ் மாளிகையிலேயே தாம் நடத்தியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மிகவும் நுட்பமான அதிநவீன முறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் ஆட்சிக்காலத்தில் அமைக்கப்பட்ட குறித்த மாளிகை தொடர்பில், அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பகிரங்கப்படுத்தியதையடுத்து, அதனை பார்வையிட நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) ஊடகவியலாளர்கள் அழைத்துச்செல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.-

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.