இலங்கையின் முதலாவது “ஸ்மார்ட் பஸ் ஹோல்ட்” மக்கள் பாவனைக்கு

கொழும்பு டவுன் ஹால் பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இலங்கையின் முதலாவது “ஸ்மார்ட் பஸ் ஹோல்ட்” தொலைத்தொடர்பு மற்றும் டிஜிட்டல் உள்கட்டமைப்பு அமைச்சர் ஹரீன் பெனாண்டோவினால் திறந்து வைக்கப்பட்டது.

குறித்த “ஸ்மார்ட் பஸ் ஹோல்ட்” மொபிடல் நிறுவனத்தின் பூர்ண அனுசரணையுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

எந்த நேரமும், எந்தவிதமான உபகரணங்களையும் பாவித்து இணையத்துடன் தொடர்பை ஏற்படுத்தக் கூடிய Internet of Things எனும் எண்ணக்கருவுக்கு அமைய இது அமைக்கப்பெற்றுள்ளது.

கையடக்கத் தொலைபேசிகளை சார்ஜ் செய்யும் வசதி, ATM வசதி, குடிநீர் போத்தல்கள் பெற்றுக்கொள்ளும் வசதி உள்ளிட்ட மேலும் பல வசதிகளுடன் இந்த நவீன பேரூந்து நிலையம் அமையப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.