எதிர்காலத்தில் கொரோனாவை விட கொடிய தொற்றுநோய்களா?எச்சரிக்கை விடுக்கும் ஐநாவின் அறிவியல்-கொள்கை குழு

எதிர்காலத்தில் கொரோனாவை விட கொடிய தொற்றுநோய்களா?எச்சரிக்கை விடுக்கும் ஐநாவின் அறிவியல்-கொள்கை குழு



எதிர்காலத்தில் கொரோனாவை விட கொடிய தொற்றுநோய்கள் நமக்காக காத்திருக்கின்றன என ஐநாவின் அறிவியல்-கொள்கை குழு கூறி உள்ளது.

இயற்கையை நாம் நடத்தும் முறையை நாம் மாற்றிக்கொள்ளாவிட்டால், எதிர்காலத்தில் வரும் தொற்றுநோய்கள் இன்னும் ஆபத்தானவையாக இருக்கும் என்றும், தொற்றுநோய்கள் அடிக்கடி வரும் என்றும்,

ஐக்கிய நாடுகள் சபையின் பயோ டைவர்சிடி பல்லுயிர் மற்றும் சுற்றுச்சூழல் சேவைகள் தொடர்பான இடை-அரசு அறிவியல்-கொள்கை குழு (ஐபிபிஇஎஸ்)எச்சரித்து உள்ளது.

பல்லுயிர் மற்றும் சுற்றுச்சூழல் சேவைகள் தொடர்பான இடை-அரசு அறிவியல்-கொள்கை குழு (ஐபிபிஇஎஸ்) என்பது பல்லுயிர் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்பு சேவைகள் தொடர்பான அறிவியல் மற்றும்,

கொள்கைக்கு இடையிலான இடைவெளியை மேம்படுத்துவதற்காக நிறுவப்பட்ட ஒரு அமைப்பு ஆகும். இது ஐக்கிய நாடுகள் அமைப்பால் உருவாக்கப்பட்டது.

ஐநாவின் அறிவியல்-கொள்கை குழு தனது அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

கொரோனா போன்ற தொற்றுநோய்கள் அடிக்கடி நிகழும், அதிகமான மக்களைக் கொன்று, உலகப் பொருளாதாரத்திற்கு இன்னும் அதிகமான சேதத்தை உருவாக்கும்.

இயற்கையை மரியாதையுடன் நடத்துவதில் அடிப்படை மாற்றம் இல்லாவிட்டால் இப்படி கண்டிப்பாக நடக்கும்.

கொரோனா வைரசைப் போலவே விலங்குகளில் இன்னும் 850,000 வைரஸ்கள் உள்ளன என்றும் அவை மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்று அந்த குழு எச்சரித்தது. தொற்றுநோய்கள் மனிதகுலத்திற்கே ஒரு அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன.

1918 இன் இன்ஃப்ளூயன்ஸா பரவியதிலிருந்து, கொரோனா உலகை தாக்கியிருக்கும் ஆறாவது தொற்றுநோயாகும் என்றும் இவை அனைத்துக்கும் மனித நடவடிக்கைகளே முழுமையான காரணம்.

காலநிலை மாற்றம் மற்றும் பல்லுயிர் இழப்புக்கு வழிவகுக்கும் அதே மனித நடவடிக்கைகள்தான், அவை விவசாயத்தில் ஏற்படுத்தும் பாதிப்பின் மூலம் தொற்று அபாயத்தையும் உண்டாக்குகின்றன.

காடுகளின் அழிப்பு, விவசாய விரிவாக்கம், வனவிலங்கு வர்த்தகம் மற்றும் நுகர்வு ஆகியவற்றின் மூலம் ஏற்படும் சுற்றுச்சூழல் சுரண்டல் ஆகியவை இதில் அடங்கும். இவற்றின் மூலம் மனிதர்கள் காட்டு விலங்குகள் மற்றும் வீட்டு விலங்குகளுடன் அதிக அளவில் நெருங்கிய தொடர்பைக் கொள்கிறார்கள். இதனால் விலங்குகளில் இருக்கும் நோய்களுடனும் மனிதர்களுடைய தொடர்பு அதிகரிக்கிறது இதனால் கொடிய நோய்கள் உருவாகின்றன என்றும் அந்த குழு எச்சரித்து உள்ளது.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.