இடி மின்னலுக்கு பயந்து ஓடிய கணவனும் மனைவியும் மின்னல் தாக்கி ஸ்தலத்திலேயே பலி

இடி மின்னலுக்கு பயந்து ஓடிய கணவனும் மனைவியும் மின்னல் தாக்கி ஸ்தலத்திலேயே பலி.

அம்பாறை - திருக்கோவில் பிரதேச வினாயகபுரத்தில் இடி மின்னல் தாக்கி கணவனும் மனைவியும் பலியாகியுள்ளனர்.

இந்த சம்பவம் இன்று மாலை 6 மணியளவில் இடம்பெற்றது.

இதில் வினாயகபுரம் தபாலக வீதியைச் சேர்ந்த 46 வயதுடைய லோகநாயகம் யோகேஸ்வரன் மற்றும் அவரது மனைவி 46 வயதுடைய காசிப்பிள்ளை ஜெயசுதா ஆகியோரே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.

இவர்களின் சடலம் திருக்கோவில் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

குறித்த தம்பதியினர் சாகாமம் கப்பித்தலாவ பகுதியிலுள்ள தமது காணியில் நலக்கடலை செய்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது பாரிய இடி மின்னல் ஏற்பட்டது.

அதற்குப் பயந்து ஓடிவருகையில் மின்னல் தாக்கி ஸ்தலத்திலேயே பலியானதாக தெரிவிக்கப்படுகிறது.

திருக்கோவில் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.