தமிழில் எழுதும் போது... நாம் செய்யும் தவறுகள்.

 தமிழில் எழுதும் போது...

நாம் செய்யும் தவறுகள்.



1. வாழ்த்துக்கள் என்பது தவறு. 

   "வாழ்த்துகள் "என்பதே சரி. " க் " வரக்கூடாது.


2. வாழ்க வளமுடன் என்பது தவறு.

 " வாழ்க வளத்துடன் " என்பதே சரி.


3." நிகழும் மங்களகரமான ஆண்டு " என்று அழைப்பிதழில் அச்சிடுவது தவறு. "மங்கலமான " என்பதே  சரி.


 " மங்கள இசை " என்றால் ஒப்பாரி. அதாவது கடைசிப் பயணத்தின் போது இசைப்பது. 

   

 " மங்கல இசை " என்றால் தொடக்கம். ( துவக்கம் என்பது தவறு ).


4. நச்சுன்னு ஒரு பாட்டு, நச்சுன்னு பேசு

    என்பது தவறு. நச்சு என்றால் நஞ்சு (விஷம்)(விடம்).

   நச்சுன்னு ஒரு பாட்டு என்றால் விஷம் போன்ற ஒரு பாட்டு என்று பொருள்.

நறுக்கென்று என்பதே நச்சுன்னு என்று மருவி வந்துள்ளது.


நான் நறுக்கென்று சொல்லி விட்டேன். 

சுருக்கென்று எடுத்துக் கொள்க.


விளக்கம்.....


இசை நிகழ்ச்சியில் கடைசியில் பாடும் பாட்டுக்கு " மங்களம் "என்பர். கச்சேரியை முடிப்பதற்கு மங்களம் பாடு என்பர்.


ஒரு நூல் (புத்தகம்) எழுதிய ஆசிரியர் அதை எழுதி முடிக்கும் போது கடைசிப் பக்கத்தில் " சுப மங்களம் " என்று முடிப்பார். இனிதே முடிவுற்றது என்று பொருள்.


ஆரியர்கள் தங்களுக்குப் பிறக்கும் குழந்தை பெண்ணாகப் பிறந்து இனி குழந்தையே வேண்டாம் என்று முடிவெடுத்தால் அப் பெண் குழந்தைக்கு "மங்களா " என்று பெயர் சூட்டுவர்.


திருவள்ளுவர் தம் குறளில் ,


மங்கல மென்ப மனைமாட்சி மற்றதன் நன்கலம் நன்மக்கள் பேறு - என்று பாடியிருக்கிறார்.  காண்க - மங்கலம். ( மங்களமில்லை )


வாழ்க வளத்துடன் ....


பகிர்வு...

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.