சற்றுமுன் நாட்டில் ஐந்து கொரோனா மரணங்கள் பதிவானது.

சற்றுமுன் நாட்டில் ஐந்து கொரோனா மரணங்கள் பதிவானது.

கொரோனா தொற்றுக்கு உள்ளான மேலும் 5 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணரத்ன தெரிவித்துள்ளார்.

இதன்படி, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கொழும்பு 02 பகுதியை சேர்ந்த, 46 வயதுடைய ஆணொருவர் நேற்று உயிரிழந்துள்ளார்.

கொரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில் வைத்திசாலையில் சிகிச்சைப்பெற்று குறித்த நபர் சிறுநீரக நோயினால் பாதிக்கபட்டிருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், வெல்லம்பிட்டிய பகுதியை சேர்ந்த 68 வயதுடைய ஒருவர் மாரடைப்பு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்க்பட்டிருந்த நிலையில் நேற்று உயிரிழந்துள்ளார்.

அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, கொழும்பு 12 சேர்ந்த 58 வயதுடைய ஒருவரும், கொழும்பு 14 ஐ சேர்ந்த 73 வயதுடைய ஒருவரும், கொழும்பு 15 ஐ சேர்ந்த 74 வயதுடைய ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

குறித்த நபர்கள் மீதான பிரேத பரிசோதனையில் கொரோனா தொற்று ஏற்ப்பட்டிருந்தமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.