ஜனவரி வரை இலங்கைக்கு ஆபத்து! உயிரிழப்புக்களும் உயரும் – விடுக்கப்பட்டது எச்சரிக்கை.

ஜனவரி வரை இலங்கைக்கு ஆபத்து! உயிரிழப்புக்களும் உயரும் – விடுக்கப்பட்டது எச்சரிக்கை.


“மினுவாங்கொடை கொரோனா வைரஸ் கொத்தணியையும், பேலியகொட கொரோனா வைரஸ் கொத்தணியையும் முழுமையாகக் கட்டுப்படுத்த இன்னும் இரண்டு மாதங்கள் செல்லலாம்.

அதுவரைக்கும் நாட்டில் ஆபத்தான நிலை காணப்படும். தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்புடன் உயிரிழந்தவர்களின் தொகையும் உயரும்.”

இவ்வாறு பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“மினுவாங்கொடை ஆடைத்தொழிற்சாலை நிறுவனத்திலிருந்து முதலாவது தொற்றாளர் அடையாளம் காணப்பட்டு ஒரு மாதம் நிறைவடைந்துள்ளது.

தற்போது இந்தக் கொத்தணிப் பரவல் ஓரளவுக்குக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. எனினும், எதிர்வரும் ஜனவரி மாதம் வரை ஆபத்து இருக்கின்றது.

ஏனெனில், தொற்றாளர்களுடன் நெருங்கிப் பழகியவர்கள் புதிய தொற்றாளர்களாக அடையாளம் காணப்படுகின்றார்கள். இதைக் கட்டுப்படுத்த எதிர்வரும் ஜனவரி மாதம் வரை காலம் எடுக்கும்.

இதேவேளை, பேலியகொட மீன் சந்தை கொரோனா வைரஸ் கொத்தணி நாடு முழுவதிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையும் இப்போதைக்குக் கட்டுப்படுத்த முடியாது. எனினும், இரண்டு மாதங்களுக்குள் கட்டுப்படுத்த முடியும்.

2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நாட்டு மக்களுக்குத் தீர்க்கரமான மாதமாக இருக்கப்போகின்றது. ஆனால்,

நாட்டு மக்கள் பூரண ஒத்துழைப்பு வழங்கினால் – சுகாதார வழிகாட்டல்களை உரிய முறையில் பின்பற்றினால் இவ்வருடம் முடிவதற்குள் கொரோனாக் கொத்தணிகளுக்கு முடிவுகட்ட முடியும்” – என்றார்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.