LPL கண்டி அணியில் முன்னணி பந்துவீச்சாளர்

LPL கண்டி அணியில் முன்னணி பந்துவீச்சாளர்.

இந்தியாவில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருவது போன்றே இலங்கையில் லங்கன் ப்ரிமியர் லீக் (LPL) கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் இந்த டி20 போட்டிகள் இவ்வாண்டு நவம்பர் 21-ஆம் திகதி முதல் தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதன்படி 5 அணிகள் விளையாடும் இந்த தொடரில் மொத்தம் 23 போட்டிகள் நடைபெற உள்ளதோடு, மத்தலை மஹிந்த ராஜபக்ச சர்வதேச கிரிக்கட் மைதானம், கண்டி பல்லேகலை சர்வதேச கிரிக்கட் மைதானம் மற்றும் கொழும்பு பிரேமதாச மைதானம் ஆகியவற்றில் இப்போட்டிகள் நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 21-ஆம் திகதி முதல் டிசம்பர் 14ஆம் திகதி வரை இந்த போட்டிகள் நடைபெற உள்ளது. இந்த நிலையில் இந்த தொடரில் விளையாடும் அணிகளில் ஒன்றான கண்டி டஸ்கர்ஸ் அணியில் இந்தியாவின் முன்னணி பந்துவீச்சாளராக இருந்த இர்பான் பதான் விளையாட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

மேலும் ,இவ்வணியில், குசல் பெரேரா, க்ரிஸ் கேல், குசல் மெண்டிஸ், நுவன் பிரதீப் ஆகியோரும் உள்ளனர். இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கட் வீரர் ஹஷான் திலகரத்ன அணியின் பயிற்றுவிப்பு குழாமில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.