10 இற்கும் மேற்பட்ட பௌத்த தேரர்கள் கையொப்பமிட்டு ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள அவசர கடிதம் - விபரம் வெளியானது.

 10 இற்கும் மேற்பட்ட பௌத்த தேரர்கள் கையொப்பமிட்டு ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள அவசர கடிதம் - விபரம் வெளியானது.


மாகாண சபை தேர்தலை நடத்த வேண்டாம் என வலியுறுத்தி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு முன்னணி பெளத்த தேரர்கள் கடிதம் அனுப்பி வைத்துள்ளனர்.

இந்த அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டுவர உழைத்த பெங்கமுவே நாலக்க தேரர், முருந்தெட்டுவே ஆனந்த தேரர் உள்ளிட்ட 10ற்கும் மேற்பட்ட தேரர்கள் இவ்வாறு கடிதத்தில் கையெழுத்து இட்டுள்ளனர்.

இந்தியாவின் அழுத்தத்திற்கு அடிபணிந்து அரசாங்கம் நடக்கக்கூடாது எனவும் அந்தக் கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை மாகாண சபைத் தேர்தல் சட்டத்தை மறுசீரமைப்பதற்காக முன்வைக்கப்பட்டுள்ள யோசனைகள் குறித்து, கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படும் என அமைச்சரவை இணைப் பேச்சாளர் உதய கம்மன்பில தெரிவிக்கின்றார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் இன்றைய ஊடக சந்திப்பின் போதே, அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.