கடந்த 24 மணித்தியாளங்களில் இடம்பெற்ற விபத்துக்களில் 8 பேர் பலி.

 கடந்த 24 மணித்தியாளங்களில் இடம்பெற்ற விபத்துக்களில் 8 பேர் பலி.


 கடந்த 24 மணித்தியாளங்களில் இடம்பெற்ற விபத்துக்களில் 8 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

அவர்களுள் இருவர் இதற்கு முன்னர் ஏற்பட்ட விபத்துகளினால் காயமடைந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. 

அத்துடன் நேற்று (23) மாலை அலவ்வ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொழும்பு - குருணாகல் வீதியில் இடம்பெற்ற நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

கொழும்பில் இருந்து குருணாகல் நோக்கி பயணித்த பேருந்து ஒன்று மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

விபத்தில் 49 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இதேவேளை ஜாஎல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

டிப்பர் ரக வாகனம் ஒன்று சைக்கிள் ஒன்றுடன் மோதியில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

அத்துடன் வாகரை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 30 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

மோட்டர் சைக்கிள் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வீதியில் குடைசாய்ந்ததில் மோட்டர் சைக்கிளில் பின்னால் அமர்ந்து சென்றவர் உயிரிழந்துள்ளார்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.