பதுக்கி வைக்கப்பட்டிருந்த 46 இலட்சம் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சா மீட்பு.

 பதுக்கி வைக்கப்பட்டிருந்த 46 இலட்சம் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சா மீட்பு.


மன்னார் பேசாலை பொலிஸ் பிரிவில் உள்ள பேசாலை 4ஆம் வட்டாரம் கடற்கரை பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு தொகுதி கேரள கஞ்சா பொதிகளை பேசாலை பொலிஸார் நேற்று (30) மாலை மீட்டுள்ளனர்.

மீட்கப்பட்ட கேரள கஞ்சா பொதிகள் 46 கிலோ கிராம் எடை கொண்டது என பொலிஸார் தெரிவித்தனர்.

மன்னார் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பண்டுள்ள வீரசிங்க வின் பணிப்பில், பேசாலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் சோமயித், உப பொலிஸ் பரிசோதகர் விவேகாணந் தலைமையிலான பொலிஸ் குழுவினர் மேற்படி கேரள கஞ்சா பொதிகளை கைப்பற்றியுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா பொதிகள் சுமார் 46 இலட்சம் ரூபாய் பெறுமதியானது என தெரிய வருகின்றது.

எனினும் சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை.

கைப்பற்றப்பட்ட கஞ்சா பொதிகள் மேலதிக விசாரணையின் பின் மன்னார் நீதவான் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.