உழவு இயந்திரம் மோதி பாடசாலை சென்ற 8 வயது சிறுவன் பலி.
உழவு இயந்திரம் மோதி பாடசாலை சென்ற 8 வயது சிறுவன் பலி.
அம்பாறை – அட்டாளைச்சேனை, ஆலங்குளம் பகுதியில் உழவு இயந்திரம் மோதியதில் 8 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார்.
இன்று (30) காலை இந்த அனர்த்தம் இடம்பெற்றதாக பொலிஸார் கூறினர்.
உயிரிழந்த சிறுவனின் சடலம் அக்கரைப்பற்று வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
பாடசாலைக்கு சென்றுகொண்டிருந்த சிறுவன் மீது உழவு இயந்திரம் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தின் போது உழவு இயந்திரத்தை செலுத்திய இளைஞர் தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் கூறினர்.
எனினும், உழவு இயந்திரத்தின் உரிமையாளர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.