ஐந்து வயதுச் சிறுவனை கடித்துக்குதறிய தெரு நாய்கள். இலங்கையில் அதிர்ச்சி சம்பவம்.

 ஐந்து வயதுச் சிறுவனை கடித்துக்குதறிய தெரு நாய்கள். இலங்கையில் அதிர்ச்சி சம்பவம்.


மாத்தளையில் தரம் ஒன்றில் கல்வி பயிலும் மாணவன் ஒருவனை தெரு நாய்கள் கடித்துக்குதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதில் கடுமையாக பாதிக்கப்பட்ட சிறுவன் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பாடசாலை விளையாட்டு மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த ஐந்து வயது சிறுவனே இதில் பாதிக்கப்பட்டுள்ளான்.

நாய்களின் கடிக்கு இலக்கான சிறுவனை விளையாட்டு மைதானத்தில் பணிபுரிந்த ஊழியர்கள் தீவிர முயற்சிக்குப் பின் மீட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த சம்பவத்தின் போது ஒரு நாய் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

காயமடைந்த மாணவர் மாத்தளை மாவட்ட பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சிறுவனின் முதுகு மற்றும் ஒரு காலை கடித்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.