பசறை கோர விபத்து தொடர்பில் வெளியாகியுள்ள புதிய தகவல்கள்.

 பசறை கோர விபத்து தொடர்பில் வெளியாகியுள்ள புதிய தகவல்கள்.


லுணுகலை – பதுளை வீதியில், பசறை – 13ஆம் கட்டையில் நேற்றுக்காலை இடம்பெற்ற பேருந்து விபத்தில், 9 ஆண்களும், 5 பெண்களும் உட்பட 14 பேர் உயிரிழந்தனர்.

அத்துடன், 5 சிறுவர்கள் உட்பட 33 பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்களுள், 20 ஆண்களும், 13 பெண்களும் அடங்குகின்றனர்.

குறித்த விபத்து இடம்பெற்றதை அடுத்து, விபத்துக்குள்ளான பேருந்துக்கு எதிர்த்திசையில் பயணித்த பாரவூர்தியின் சாரதி தப்பிச் சென்றிருந்தார்.

இந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை குறித்த பஸ்ஸின் சாரதி உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்ற போதிலும் வழமையான சாரதி பேருந்தை செலுத்தவில்லை என தெரியவந்துள்ளது.

பேருந்தை செலுத்த வேண்டிய சாரதிக்கு பதிலாக மற்றுமொருவர் பேருந்தை செலுத்தியுள்ளார்.

லுணுகலையை சேர்ந்த 53 வயதான பேருந்தின் சாரதி காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.