மீண்டும் பயணக்கட்டுப்பாடுகளை விதிக்குமாறு கோரிக்கை.

 மீண்டும் பயணக்கட்டுப்பாடுகளை விதிக்குமாறு கோரிக்கை.


தமிழ் – சிங்கள புத்தாண்டை முன்னிட்டு கொரோனா பரவுவதைக் கட்டுப்படுத்த பயணக் கட்டுப்பாடுகளை விதிப்பதில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செய்தித் தொடர்பாளர் டாக்டர் சமந்த ஆனந்த இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

மேலும், பண்டிகை காலங்களில் மக்களின் அதிக நடமாட்டத்தால் நாட்டில் கொரோனா பரவும் ஆபத்து மீண்டும் அதிகரிக்கக்கூடும் என்றும் கூறினார்.

எனினும் மக்கள் கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும் என்றும், மீண்டும் பயணக்கட்டுப்பாடுகளை விதிக்க அரசாங்கம் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்னாண்டோபுள்ளே நேற்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.