விமலுக்கு எதிராக ரிஷாட் பதியுதீன் சிஐயிடம் முறைப்பாடு.

 விமலுக்கு எதிராக ரிஷாட் பதியுதீன் சிஐயிடம் முறைப்பாடு.


அமைச்சர் விமல் வீரவன்சவிற்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் சிஐடியிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

அமைச்சர் விமலின் உரை தொடர்பிலேயே ரிஷாட் சிஐடியினரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

ஸஹ்ரான் ஹாசிமுடன் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத்தும் அவரது சகோதரரும் தொடர்பை பேணிவந்தனர் என விமல் வீரவன்ச தெரிவித்தமை தொடர்பிலேயே ரிஷாட் பதியுதீன் சிஐடியினரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

சிஐடியினரிடம் முறைப்பாடு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நான் ஸஹ்ரான் ஹாசிமை சந்தித்தது இல்லை எனது சகோதரர் அவருடன் தொடர்பை பேணவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

முன்னரும் நான் இதனை தெரிவித்தேன்; தற்போதும் தெரிவிக்கின்றேன்; இதுவே உண்மை என அவர் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ள விடயம் பொய்யானது; அவர் தனது அரசியல் ஆதாயத்திற்காக இதனை தெரிவிக்கின்றார்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.