எதிர்வரும் ஏப்ரல் மாதத்திற்குள்குள் வரையறை இன்றி இணைய வசதி.

 எதிர்வரும் ஏப்ரல் மாதத்திற்குள்குள் வரையறை இன்றி இணைய வசதி.


வரையறை இன்றி இணைய வலையமைப்பினை அறிமுகப்படுத்துமாறு அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கும் இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் தமது நிலைப்பாடுகளை கடந்த முதலாம் திகதிக்கு முன்னதாக சமர்ப்பிக்குமாறு தொலைத்தொடர்பு சேவையினை வழங்கும் அனைத்து நிறுவனங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இதற்கமைய, தொலைத்தொடர்பு சேவையினை வழங்கும் அனைத்து நிறுவனங்களினாலும் சமர்ப்பிக்கப்பட்ட தொகுப்புகளை மதிப்பீடு செய்யும் பணியில் இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு ஈடுபட்டு வருகின்றது.

இதன்படி, எதிர்வரும் ஏப்ரல் மாதத்திற்குள்குள் வரையறை இன்றி இணைய வசதிகளை நுகர்வோர் பெற்றுக்கொள்ள முடியுமென இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.