கொழும்பு மாநகரில் ஒரு இலட்சம் மரக்கன்றுகளை நடும் வேலைத்திட்டம்.

 கொழும்பு மாநகரில் ஒரு இலட்சம் மரக்கன்றுகளை நடும் வேலைத்திட்டம்.


கொழும்பிற்கு மரம் எனும் தொனிப்பொருளின் கீழ் கொழும்பு மாநகரில் ஒரு இலட்சம் மரக்கன்றுகளை நடும் வேலைத்திட்டம் அடுத்த மாதம் 20 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

ஒரு வருடகாலப்பகுதிக்குள் ஒரு இலட்சம் மரக்கன்றுகளை நடுவதற்கு திட்டமிடப்பட்டிருப்பதாக வனஜீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

அங்குரார்ப்பண நிகழ்வுக்கு முன்னர் 15 ஆயிரம் கன்றுகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது.

பாடசாலை மாணவர்கள் உட்பட மக்களுக்கு இந்த மரக்கன்றுகள் வழங்கப்படவுள்ளன. கொழும்பு மாநகரில் நிலவும் ஒட்சிசன் பிரச்சினைக்கு தீர்வாக இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

விகாரமஹாதேவி பூங்காவில் கிராமிய பழவகை பூங்கா ஒன்றும் அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்த வேலைத்திட்டத்தில் வனஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு, சுற்றாடல் கல்வி அமைச்சு உள்ளிட்ட பல நிறுவனங்களை பங்கேற்க செய்வதற்கு கொழும்பு மாநகர சபை நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.