பேக்கரி உற்பத்திகளின் விலை அதிகரிக்குமா? பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் விளக்கம்

 பேக்கரி உற்பத்திகளின் விலை அதிகரிக்குமா? பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் விளக்கம்.


எதிர்வரும் சிங்கள் தமிழ் புத்தாண்டின்போது, பாண் தவிர்ந்த ஏனைய அனைத்து பேக்கரி உற்பத்திகளின் விலை அதிகரிக்குமென பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இறக்குமதி கட்டுப்பாடுகள், வரி அதிகரிப்பு மற்றும் மூலப்பொருட்களின் விலை அதிகரிப்பு காரணமாகவே இவ்வாறு பேக்கரி உற்பத்திகளின் விலை அதிகரிக்குமென பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

அத்துடன், அனைத்து எண்ணெய் வகைகளும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட நிலையில், தற்போது அதற்கான சாத்தியக்கூறுகள் இல்லாது போயுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் எழுத்துமூலமாக அறிவித்துள்ள போதும் இதுவரையின் எந்தவிதமான நடவடிக்கைகளும் முன்னெடுக்கபடவில்லை என பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, உளுந்து இறக்குமதி தடை காரணமாக நாட்டில் பல்வேறு சைவ உணவு விற்பனை நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாக உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.