நாவலப்பிட்டியில் நேருக்கு நேர் மோதவிருந்த ரயில்கள்; பாரிய விபத்தில் இருந்து தப்பிய பயணிகள்
நாவலப்பிட்டியில் நேருக்கு நேர் மோதவிருந்த ரயில்கள்; பாரிய விபத்தில் இருந்து தப்பிய பயணிகள்
நாவலபிட்டி ரயில் நிலையத்தில் நேற்றிரவு இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதி பாரிய விபத்து ஏற்படவிருந்த நிலையில், தெய்வாதீனமாக தவிர்க்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் நாவலபிட்டி ரயில் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் சமிக்ஞை வழங்கும் அதிகாரிகள் பணி நீக்கப்பட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பதுளையில் இருந்து கண்டி வரை பயணித்த பொருட்கள் கொண்டு செல்லும் ரயிலும், பயணிகள் ரயில் ஒன்றும் நேற்று இரவு 7.30 மணியளவில் நேருக்கு நேர் மோதவிருந்த சந்தர்ப்பம் தவிர்க்கப்பட்டுள்ளது.
கண்டியில் இருந்து நாவலப்பிட்டி வரை செல்லும் ரயிலின் சாரதி தான் நிறுத்துமிடத்தில் மற்றுமொரு ரயில் இருப்பதனை அவதானித்துள்ளார்.
உடனடியாக செயற்பட்டவர் தான் செலுத்தி வந்த ரயிலை தீவிர முயற்சிகள் மூலம் நிறுத்தியுள்ளார். இதன்போது குறித்த ரயில் பயணிகள் பலர் பயணித்துள்ளதாக ரயில்வே போக்குவரத்து அதிகாரி தெரிவித்துள்ளளார்.
இந்த சம்பவத்தால் நள்ளிரவு 12.30 மணி வரை ரயில் நிலையத்தில் ரயிலை நிறுத்தி வைக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
அத்துடன் பயணிகளுக்கு ஏற்பட்ட தாமதம் காரணமாக பலர் வாகனங்கள் மூலம் அனுப்பி வைக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
தவறான சமிக்ஞை மற்றும் அதிகாரிகளின் கவனயீனம் காரணமாக ஏற்படவிருந்த பாரிய விபத்து நொடி பொழுதில் தவிர்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.