கடந்த ஐந்து நாட்களில் 52 பேர் பலி. பொலிசார் வெளியிட்டுள்ள தகவல்.

கடந்த ஐந்து நாட்களில் 52 பேர் பலி. பொலிசார் வெளியிட்டுள்ள தகவல்.

𝑰𝑻𝑴▪️நாடு முழுவதும் கடந்த 5 நாட்களில் 399 வீதி விபத்துக்கள் பதிவாகியுள்ளதாகவும் அதில் 52 பேர் மரணமடைந்துள்ளதாகவும், பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

𝑰𝑻𝑴▪️கடந்த ஏப்ரல் 13ஆம் திகதி முற்பகல் 6.00 மணி முதல் இன்று (18) முற்பகல் 6.00 மணி வரையான காலப் பகுதியில் இவ்விபத்துகள் மற்றும் மரணங்கள் பதிவாகியுள்ளதாக, அஜித் ரோஹண தெரிவித்தார்.

𝑰𝑻𝑴▪️அதற்கமைய சராசரியாக 10 பேர் தினமும் மரணமடைந்துள்ளதாக தெரிவித்த அவர், கவனயீனம், பாதுகாப்பற்ற வாகன செலுத்துகை, ஒழுக்கமற்ற சாரதிகள் காரணமாக இவ்விபத்துகளில் பெரும்பாலானவை இடம்பெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார்.

𝑰𝑻𝑴▪️அத்துடன் இவ்விபத்துகளில் 669 பேர் காயமடைந்துள்ளதாக அஜித் ரோஹண தெரிவித்தார்.

𝑰𝑻𝑴▪️இவ்விபத்துகள் தொடர்பாக 1,429 மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட 2,242 வாகனங்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

𝑰𝑻𝑴▪️குறிப்பாக போதையில் வாகனம் செலுத்தியமை, விபத்துகளை ஏற்படுத்தியமை உள்ளிட்ட காரணங்கள் தொடர்பில் குறித்த வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

கைப்பற்றப்பட்ட வாகனங்கள்.

👉முச்சக்கரவண்டிகள் - 552

👉கார்கள் - 128

👉கெப் வண்டிகள்- 22

👉பயணிகள் பஸ் வண்டிகள் - 12

👉லொறிகள் - 38

👉இரட்டை பயனபாட்டு வாகனங்கள் - 28

👉வேன்கள் - 30

👉கொள்கலன் வாகனம் - 01

👉துவிச்சக்கர வண்டிகள் - 02

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶



No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.