சாரதிகளுக்கான மகிழ்ச்சிகர செய்தி.

 சாரதிகளுக்கான மகிழ்ச்சிகர செய்தி



 காலாவதியான சாரதி அனுமதி பத்திரத்தின் செல்லுபடியாகும் காலத்தை தற்காலிகமாக நீட்டித்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. 

குறித்த வர்த்தமானி அறிவித்தலின் படி, ஏப்ரல் முதலாம் திகதி முதல் செப்டம்பர் மாதம் 30 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் காலாவதியாகும் அனைத்து சாரதி அனுமதி பத்திரங்களின் செல்லுபடியாகும் காலம் 06 மாதங்களால் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளரின் கைச்சாத்துடன் குறித்த வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ள நிலையில், தற்போது செல்லுபடியாகும் காலம் நீடிக்கப்பட்டுள்ள சாரதி அனுமதி பத்திரங்களுக்கு இது பொருந்தாது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.