மூன்றாவது கொரோனா அலை ஏற்பாடும் அபாயம்.

 மூன்றாவது கொரோனா அலை ஏற்பாடும் அபாயம்.


புத்தாண்டில் மூன்றாவது கொரோனா அலை ஏற்படுவதற்கான அவதானம் இருப்பதாக சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன ​தெரிவித்துள்ளார்.

கடந்த இரண்டு வாரங்களாக மக்கள் வர்த்தக நிலையங்களுக்குச் சென்றமை, வர்த்தக நிலையங்களுக்குள் கூடியிருந்தமை என்பவற்றைப் பார்க்கையில், கொரோனா 3ஆவது அலை உருவாக வாய்ப்புள்ளதென்றும் தெரிவித்துள்ளார்.

எனவே, புத்தாண்டை மிகவும் சுகாதார பாதுகாப்புடன் கொண்டாடுவதற்கான ஆலோசனை​கள் அடங்கிய வழிகாட்டல்களை இன்று வெளியிட எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், புத்தாண்டு விளையாட்டுப் போட்டிகளை கட்டுப்படுத்த எதிர்பார்த்துள்ளதுடன், குழுக்களாக இணைந்து விளையாடும் வி​ளையாட்டுக்கள் தவிர்த்து, தனியாக விளையாடும் விளையாட்டுகள் குறித்து கவனம் செலுத்துவதாகவும் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

மேலும் புத்தாண்டு கொண்டாட்டங்களில் ஊரில் உள்ளவர்களை மட்டும் இணைத்து சிறிய அளவில் முன்னெடுக்குமாறு அவர் தெரிவித்துள்ளார்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.