உம்ரா யாத்திரைக்கு கொரோனா தடுப்பூசி பெற்றுக் கொண்டவர்களுக்கு மாத்திரமே அனுமதி.

 உம்ரா யாத்திரைக்கு கொரோனா தடுப்பூசி பெற்றுக் கொண்டவர்களுக்கு மாத்திரமே அனுமதி.


இந்த ஆண்டுக்கான உம்ரா யாத்திரைக்கு கொரோனா தடுப்பூசி பெற்றுக் கொண்டவர்களுக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்படும் என சவூதி அரேபியா அறிவித்துள்ளது.

சவூதி அரேபியாவின் ஹஜ் மற்றும் உம்ரா தொடர்பான அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, இரண்டு கொரோனா தடுப்பூசிகளையும் பெற்றுக் கொண்டவர்கள் மற்றும் உம்ரா யாத்திரைக்கு 14 நாட்கள் முன்னதாக கொரோனா தடுப்பூசியை பெற்றுக் கொண்டவர்கள் ஆகியோருக்கு உம்ரா யாத்திரைக்கு அனுமதி வழங்கப்படவுள்ளது.

அத்துடன், கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களுக்கும் உம்ரா யாத்திரைக்கு அனுமதி வழங்கப்படவுள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், புனித ரமழான் மாதத்தில் இருந்து இதற்கான அனுமதி வழங்கப்படவுள்ளதாக, சவூதி அரேபியாவின் ஹஜ் மற்றும் உம்ரா தொடர்பான அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன் மூலம் கொரோனா தொற்று குறித்த சுகாதார நடைமுறைகளின் அடிப்படையில் யாத்திரைக்கு வருபவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியும் என சவூதி அரேபியா நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

எனினும், இந்த நடைமுறை ஹஜ் யாத்திரை வரை நீடிக்கப்படுமா என்பது குறித்து தெளிவின்மை காணப்படுவதாக, சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.