மன்னாரில் ஆபத்தான முறையில் பயணித்த சிறுமிகள்.

மன்னாரில் ஆபத்தான முறையில் பயணித்த சிறுமிகள்.

𝑰𝑻𝑴▪️தெற்கு அதிவேக வீதியில், வீதி நடைமுறைகளை மீறி இளைஞர்கள் நால்வர் காரில் பயணித்த பரபரப்பு அடங்குவதற்குள் அதேபோன்ற சம்பவமொன்று தற்போது மன்னாரில் இடம்பெற்றுள்ளது.

𝑰𝑻𝑴▪️கடந்த சில தினங்களுக்கு முன்னர் தெற்கு அதிவேக வீதியில், வீதி நடைமுறைகளை மீறி பயணித்த நால்வர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

𝑰𝑻𝑴▪️இந்நிலையில் இன்று காலை மன்னார் – தலைமன்னார் பிரதான வீதியில் தென்னிலங்கை பதிவைக்கொண்ட WP-CAC 9100 என்ற இலக்கமுடைய காரொன்று பயணித்த நிலையில் குறித்த காரின் ஜன்னல்கள் வழியாக இரு சிறுமிகள் அமர்ந்து பயணித்துள்ளனர்.

𝑰𝑻𝑴▪️இதனை அவ்வழியாக சென்ற ஒருவர் புகைப்படம் எடுத்து, மன்னார் பொலிஸ் நிலையை பொறுப்பதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார். இதனையடுத்து , உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதாக பொலிஸார் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶



No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.