தேங்காய் எண்ணெய் பிரச்சினை காரணமாக கொத்து விற்பனை குறைவடைந்தது.
தேங்காய் எண்ணெய் பிரச்சினை காரணமாக கொத்து விற்பனை குறைவடைந்தது.
தேங்காய் எண்ணெய் பிரச்சினை காரணமாகப் பொருளாதாரம் பாதிக் கப்பட்டுள்ளது என அகில
இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
தற்போது நிலவும் சூழ்நிலையில் தேங்காய் எண்ணெய்யில் எது நல்லது எது கெட்டது என அறிந்து கொள்ள முடியாமல் உள்ளது.
விசேடமாகத் தேங்காய் விலை அதிகரித்தமையால் நாங்கள் அதிகமாகத் தேங்காய் எண்ணெய்யை பயன்படுத்தித்தான் உணவுப் பொருட்கள் தாயாரிப்பில் ஈடுபட்டுவந்தோம் தற்போது குடி தண்ணீரில் தான் உணவு தயாரிக்கவேண்டும்.
அரசாங்கத்தின் கவனக் குறைவால் எங்களின் வியாபாரம் மற்றும் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
வடை, மரக்கறி ரோட்டி, கொத்து, பெட்டிஸ் மற்றும் சமைக்கும் உண வுகளுக்கும் தேங்காய் எண்ணெய்யின் பயன்பாடு மிக அவசியமாகும்.
தற்போது நுகர்வோர்களின் வருகையும் குறைந்துள்ளது என அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத்தின தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.
✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.