நோன்புப் பெருநாளுடனான நீண்ட விடுமுறை - போக்குவரத்து கட்டுப்பாடு குறித்து இராணுவத்தளபதியின் விளக்கம்.

 நோன்புப் பெருநாளுடனான நீண்ட விடுமுறை - போக்குவரத்து கட்டுப்பாடு குறித்து இராணுவத்தளபதியின் விளக்கம்.



𝑰𝑻𝑴▪️நோன்புப் பெருநாளுடனான நீண்ட விடுமுறைக்கு இடைப்பட்ட நாட்களில் நிலைமையைக் கருத்திற் கொண்டு , போக்குவரத்து கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டிய தேவை ஏற்பட்டால் நிச்சயம் அதனை செயற்படுத்துவோம். தேவை ஏற்படாவிடின் அவ்வாறான தீர்மானம் எடுக்கப்பட மாட்டாது என்று இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

𝑰𝑻𝑴▪️எனினும் மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைகள் மற்றும் ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமையவே இது குறித்த தீர்மானங்கள் எடுக்கப்படும் என்றும் இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா சுட்டிக்காட்டினார்.

𝑰𝑻𝑴▪️எதிர்வரும் வெள்ளிக்கிழமை நோன்புப் பெருநாள் விடுமுறை மற்றும் அடுத்த நாட்களில் வார இறுதி விடுமுறை என்பதால் போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமா என்பது தொடர்பில் தெளிவுபடுத்தும் போதே இராணுவத்தளபதி இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ,

𝑰𝑻𝑴▪️நாட்டில் தற்போதுள்ள நிலைமையைக் கருத்திற் கொண்டு முழு நாட்டையும் முடக்காமல் தொற்றாளர்கள் அதிகளவில் இனங்காணப்படும் பிரதேசங்களை மாத்திரம் தனிமைப்படுத்தும் செயற்பாடுகளே முன்னெடுக்கப்படுகின்றன. 

𝑰𝑻𝑴▪️அதற்கமைய இதுவரையில் (நேற்று(09) மாலை வரை) 6 பொலிஸ் பிரிவுகளும் , 114 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இலங்கயில் சுமார் 44 400 இற்கும் அதிகமான கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் காணப்படுகின்ற நிலையில், மிகக் குறைந்தளவானவையே தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

𝑰𝑻𝑴▪️எனினும் நோன்புப் பெருநாளுடனான நீண்ட விடுமுறைக்கு இன்னும் சில நாட்கள் உள்ளன. இதற்கு இடைப்பட்ட நாட்களில் நிலைமையைக் கருத்திற் கொண்டு, போக்குவரத்து கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டிய தேவை ஏற்பட்டால் நிச்சயம் அதனை செயற்படுத்துவோம். 

𝑰𝑻𝑴▪️தேவை ஏற்படாவிடின் அவ்வாறான தீர்மானம் எடுக்கப்பட மாட்டாது. அடுத்தடுத்த வாரங்கள் தொடர்பில் சுகாதார நிபுணர்களுடன் கலந்தாலோசனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அதற்கமையவும் ஜனாதிபதியின் ஆலோசனைகளுக்கமையவும் நாட்டுக்கு தேவையான பொறுத்தமான தீர்மானம் எடுக்கப்படும்.

𝑰𝑻𝑴▪️அத்தோடு இனங்காணப்படும் தொற்றாளர்களுக்கு பாதிப்புக்கள் ஏற்படாத வகையில் 2000 இற்கும் அதிகளவானோருக்கு ஒரே நேரத்தில் சிகிச்சையளிக்கக் கூடியவாறான வைத்தியசாலை இராணுவத்தினரால் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. 

𝑰𝑻𝑴▪️இந்த வைத்தியசாலைக்கான வைத்தியர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதோடு , தாதிகளும் ஏனைய ஊழியர்களும் இரு தினங்களில் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். எனவே நாட்டில் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டாலும் அவர்களுக்கு சிகிச்சையளிப்பதில் எவ்வித நெருக்கடியும் ஏற்படாது என்றார்.

❁ ════ ❃• 𝑰𝑻𝑴 •❃ ════ ❁

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.