தொலைக்காணொளி மூலமான கல்விமுறை 60% தோல்வியடைந்துள்ளது

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀


 தொலைக்காணொளி மூலமான கல்விமுறை 60% தோல்வியடைந்துள்ளது 

இலங்கை ஆசிரியர் சங்கம். நாட்டில் தற்போது பயன்படுத்தப்படுகின்ற தொலைக்காணொளி மூலமான கல்விமுறை 60 சதவீதம் தோல்வி அடைந்துள்ளமை தெரியவந்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது 

தொலைக்காணொளி மூலமான கல்வி முறைமை தொடர்பில் அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டல்களில் தொலைக்காணொளி கல்வி முறைமையில் நிலவும் நடைமுறை சிக்கல்களுக்கு தீர்வு இல்லை என அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது. 

இதேவேளை பிபில - லுணுகல - பல்லேகுருவ பகுதியில் தொலைத்தொடர்பு வசதி இன்மையால் பாடசாலை மாணவர்கள் மிகுந்த அசௌகரியங்களை எதிர்நோக்கி உள்ளதாக அந்த பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். 

இதற்காக மாணவர்கள் மரங்களின் மீதும் வீட்டு கூரைகளின் மீதும் ஏறும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பில் கல்வி அமைச்சுடன் கலந்துரையாடப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.