தாமதமான கொடுப்பனவுகளை வழங்குமாறு ஆசிரியர் சேவை சங்கம் கோரிக்கை.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 


தாமதமான கொடுப்பனவுகளை வழங்குமாறு ஆசிரியர் சேவை சங்கம் கோரிக்கை.

கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சை நிறைவடைந்து 3 மாதங்களுக்கும் அதிக காலம் கடந்த நிலையில், பரீட்சை கடமை கொடுப்பனவை கல்வி அமைச்சு இதுவரையில் வழங்கவில்லை என இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் தெரிவித்துள்ளது. 

இதன் காரணமாக பரீட்சை கடமைகள் மற்றும் விடைத்தாள் திருத்த பணிகளில் ஈடுபட்டவர்கள் பொருளாதார பிரச்சினைகளுக்கு முகம் கொடுப்பதாக சுட்டிக்காட்டியுள்ளது. 

பரீட்சை கடமைகளில் ஈடுபட்ட பணிக்குழாமை சேர்ந்த ஆசிரியர்கள், அதிபர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்கள் உள்ளிட்டோரின் கொடுப்பனவை பெற்றுக் கொடுக்க அரசாங்கம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டுமென இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் செயலாளர் மகிந்த ஜயசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.