கப்பலின் பாதிப்பு 20 வருடங்களுக்கு இருக்கும்

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀


 கப்பலின் பாதிப்பு 20 வருடங்களுக்கு இருக்கும் 

அமைச்சர் மஹிந்த அமரவீர கொழும்பு துறைமுகத்துக்கு அருகில் தீப்பற்றிய எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலால் சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்ட பாதிப்புக்கள், இன்னும் 20 வருடங்கள் வரையில் காணப்படுமென தெரிவிக்கும் அமைச்சர் மஹிந்த அமரவீர, இதன் பாதிப்புக்களை டொலர்களில் மதிப்பிட முடியாதெனவும் தெரிவித்துள்ளார். 

அது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், தீப்பற்றி எரிந்த கப்பலில் இருந்து, கடலில் கலந்த பாரியளவான பிளாஸ்டிக் பொருள்கள் தற்போது 40 கொள்கலன்களில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கும் அவர், கடலில் இன்னும் எவ்வளவு பிளாஸ்டிக் பொருள்கள் இருக்குமென ஆராய முடியாதெனவும் அவர் தெரிவித்தார்.

 எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலில் ஆயிரத்து 486 கொள்கலன்கள் இருந்ததாகவும்,இது நாட்டின் பிரதான உற்பத்தி நிறுவனங்கள் இரண்டுக்கு, இரு மாதங்கள் தேவையான பிளாஸ்டிக் பொருள்கள் இருந்ததாகவும் தெரிவித்த அமைச்சர் மஹிந்த அமரவீர, கப்பல் நிறுவனத்திடமிருந்து நட்டஈட்டைப் பெற வேண்டும். 

மேலும் ,அத்தோடு இதற்குப் பொறுப்புக்கூற வேண்டியவர்கள் அனைவருக்கும் தண்டனை வழங்கப்பட வேண்டுமெனவும் தெரிவித்தார்.
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.