அருணாசல பிரதேசத்தில் 3.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 

அருணாசல பிரதேசத்தில் 3.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்.


கடந்த சில நாட்களாக வடகிழக்கு மாநிலங்களில் தொடர்ச்சியாக நிலநடுக்க அதிர்வுகள் உணரப்பட்டு வருகின்றன. 

இதனால் அந்தந்த பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் அச்சத்தில் உறைந்து உள்ளனர். அருணாசல பிரதேசத்தின் இடாநகரில் இருந்து தென்மேற்கே இன்று காலை 6.09 மணியளவில் மித அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.

 இது ரிக்டர் அளவில் 3.0 ஆக பதிவாகி உள்ளது என தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்து உள்ளது. இதனால் ஏற்பட்ட பொருள் இழப்புகள் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் உடனடியாக வெளிவரவில்லை. 

கடந்த சில நாட்களாக வடகிழக்கு மாநிலங்களில் தொடர்ச்சியாக நிலநடுக்க அதிர்வுகள் உணரப்பட்டு வருகின்றன. நேற்று அதிகாலையில் மணிப்பூர், அருணாசல பிரதேசம் மாநிலங்களில் நிலநடுக்கங்கள் அடுத்தடுத்து ஏற்பட்டன. 

இதேபோன்று நேற்று முன்தினமும் வடகிழக்கு மாநிலங்களில் நிலநடுக்கங்கள் உணரப்பட்டன. நாட்டின் தலைநகர் டெல்லியில் பஞ்சாபி பாக் பகுதியில் நேற்று மதியம் 12.02 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டு ரிக்டர் அளவில் 2.1 ஆக பதிவாகி இருந்தது. இதனால் அந்தந்த பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் அச்சத்தில் உறைந்து உள்ளனர். ✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.