மட்டக்களப்பில் கொவிட் 19 பரவல் தொடர்பான முழு விபரம்.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 மட்டக்களப்பில் கொவிட் 19 பரவல் தொடர்பான முழு விபரம்.


மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலத்தில் 178 கொவிட் 19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இன்று (23) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது மட்டக்களப்பு பிராந்திய சுகாதார வைத்திய பணிப்பாளர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார். 

இது தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 40 நபர்களும், ஓட்டமாவடி சுகாதார வைத்தியதிகாரி பிரிவில் 26 நபர்களும், ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 22 நபர்களும், மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 19 நபர்களும், செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 13 நபர்களும், ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 11 நபர்களும், களுவாஞ்சிக்குடி மற்றும் கோரளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி ஆகிய பிரிவுகளில் தலா 10 நபர்களும், வெல்லாவெளி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 9 நபர்களும், கிரான் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 8 நபர்களும், வாகரை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 5 நபர்களும், பட்டிப்பளை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 2 நபர்களும், பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

 மட்டக்களப்பு மாவட்டத்தில் மொத்தமாக 5,400 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 76 நபர்கள் மரணமடைந்துள்ளதுடன், இதுவரை 3,623 நபர்கள் குணமடைந்து வீடு சென்றுள்ளனர் 1,524 நபர்கள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர். மூன்றாவது அலையில் 4,417 நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

67 நபர்கள் மரணமடைந்துள்ளனர். காத்தான்குடி, கோரளைப்பற்று மத்தி மற்றும் மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் திடீர் தொற்று அதிகரிப்பினால் சில கிராம சேவையாளர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்படவுள்ளன.

 காத்தான்குடி பிரிவில் 8 கிராம சேவையாளர் பிரிவுகளும், கோறளைப்பற்று மத்தி பிரிவில் ஒரு கிராம சேவையாளர் பிரிவும், மட்டக்களப்பு பிரிவில் 2 கிராம சேவையாளர் பிரிவும் தனிமைப்படுத்தப்படவுள்ளன.

 மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியான புதிய தொற்றாளர்களுக்கான காரணம் ஒன்று கூடலே ஆகும் மக்கள் இவற்றை தவிர்ப்பதன் மூலம் கொவிட் தொற்றை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும் என பணிப்பாளர் மேலும் தெரிவித்தார். ✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.