அம்பியூலன்ஸ் வண்டியை சேதப்படுத்திய 65 வயதுடைய நபர் கைது!

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀


 அம்பியூலன்ஸ் வண்டியை சேதப்படுத்திய 65 வயதுடைய நபர் கைது! 

கம்பஹா வைத்தியசாலைக்கு சொந்தமான அம்பியூலன்ஸ் வண்டியை சேதப்படுத்தியமை மற்றும் அதன் சாரதியை தாக்கியமை தொடர்பில் 65 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பதில் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார். 

கம்பஹா வைத்தியசாலைக்கு சொந்தமான அம்பியூலன்ஸ் வண்டியை சேதப்படுத்தியமை மற்றும் அதன் சாரதியை தாக்கியமை தொடர்பில் சந்தேகத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 கடவத்தை பகுதியைச் சேர்ந்த 65 வயதுடைய நபரே கைது செய்யப்பட்டுள்ளார். திங்கட்கிழமை இந்தச் சம்பவம் பதிவாகியுள்ளதுடன் இதன்போது சந்தேக நபர் மதுபோதையில் இருந்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. 

இதனைத் தொடர்ந்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

சந்தேக நபருக்கு எதிராக பொதுச் சொத்துகள் சட்டவிதி, மதுபோதையில் செய்யும் குற்றச் செயற்பாடுகள் மற்று சாரதியை தாக்கியமை தொடர்பில் குற்றவியல் தண்டனைச் சட்டக்கோவையின் கீழும் சட்டநடவடிக்கை எடுக்கப்படவுள்ளன என்றார். 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.