பாணந்துறையில் சுகாதார வழிகாட்டுதல்களை மீறி திருமணம் - 20 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀


 பாணந்துறையில் சுகாதார வழிகாட்டுதல்களை மீறி திருமணம் - 20 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்.

பாணந்துறையில் திருமணநிகழ்வொன்றில் கலந்துகொண்ட எட்டு பெண்கள் உ;டப் 20 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். பாணந்துரை பலேமுல்லவில் இடம்பெற்ற திருமணநிகழ்வில் கலந்துகொண்டவர்களே அதே இடத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

 தனிமைப்படுத்தல் காலம் முடிவடைந்தவுடன் தனிமைப்படுத்தல் சட்டங்களின் அடிப்படையில் அவர்களிற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ்பேச்சாளர் தெரிவித்துள்ளார். 

சுகாதார வழிகாட்டுதல்களை மீறி திருமணம் இடம்பெறுவதாக பொலிஸாரிற்கு கிடைத்த தகவலை தொடர்ந்து அவர்கள் அந்த இடத்தை சோதனையிட்டனர் என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார். 

பொலிஸார் அங்கு சென்றவேளை ஏற்கனவே பலர் அங்கிருந்து சென்றுவிட்டனர் என அவர் குறிப்பிட்டுள்ளார். 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.