வரலாற்றில் இன்று ஜூலை 22.

 வரலாற்றில் இன்று ஜூலை 22.



ஜூலை 22  கிரிகோரியன் ஆண்டின் 203 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 204 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 162 நாட்கள் உள்ளன.


இன்றைய தின நிகழ்வுகள்.


👉838 – ஆன்சென் என்ற இடத்தில் நடந்த சமரில் பைசாந்தியப் பேரரசர் தியோபிலசு அப்பாசியர்களிடம் பெரும் பின்னடைவைச் சந்தித்தார்.

👉1099 – முதலாம் சிலுவைப் போர்: பௌலியனின் கோட்ஃபிறி எருசலேம் பேரரசின் திருக்கல்லறைத் தேவாலயத்தின் முதலாவது காப்பாளராகத் தெரிவு செய்யப்பட்டார்.

👉1298 – இசுக்காட்லாந்து விடுதலைப் போர்கள்: பால்கிர்க் சமரில் இங்கிலாந்தின் முதலாம் எட்வர்டு மன்னர் வில்லியம் வேலசையும் அவரது இசுக்காட்டியப் படைகளையும் தோற்கடித்தார்.

👉1456 – அங்கேரியின் ஆட்சியாளர் பெல்கிரேட் முற்றுகையின் போது உதுமானியப் பேரரசர் இரண்டாம் முகமதுவைத் தோற்கடித்தார்.

👉1499 – புனித உரோமைப் பேரரசர் முதலாம் மாக்சிமிலியனின் படைகளை சுவிசுப் படைகள் டொனார்க் என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் வென்றன.

👉1587 – அமெரிக்காவில் வட கரொலைனா, ரோனோக் தீவில் ஆங்கிலேயர்களின் இரண்டாவது தொகுதி குடியேற்றிகள் வந்திறங்கினர்.

👉1706 – இங்கிலாந்துக்கும் இசுக்கொட்லாந்துக்கும் இடையில் ஒன்றிணைப்புச் சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இது பின்னர் பெரிய பிரித்தானிய இராச்சியம் உருவாக வழிவகுத்தது.

👉1797 – பிரெஞ்சுப் புரட்சிப் போர்கள்: எசுப்பானிய, பிரித்தானியக் கடற்படைகளுக்கிடையே சமர் மூண்டது. இதன்போது ஹோரஷியோ நெல்சன் கையில் படுகாயமடைந்து, கையின் ஒரு பகுதியை இழந்தார்.

👉1802 – பேரரசர் கியா லொங் அனோய் நகரைக் கைப்பற்றி வியட்நாமை ஒன்றிணைத்தார்.

👉1812 – நெப்போலியப் போர்கள்: வெல்லிங்டன் பிரபு தலைமையிலான பிரித்தானியப் படைகள் எசுப்பானியாவில் சலமாங்கா என்ற இடத்தில் பிரெஞ்சுப் படைகளைத் தோற்கடித்தனர்.

👉1823 – யாழ்ப்பாணத்தில் பட்டிக்கோட்டா குருமடம் டானியேல் வாரன் புவர் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது.

👉1916 – கலிபோர்னியா, சான் பிரான்சிஸ்கோவில் ஊர்வலமொன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 10 பேர் உயிரிழந்தனர், 40 பேர் காயமடைந்தனர்.

👉1933 – தனியே உலகைச் சுற்றி வந்த முதல் மனிதர் வைலி போஸ்ட் 7 நாட்கள், 18 மணி, 45 நிமிடங்களில் உலகைக் கடந்து நியூயார்க்கை வந்தடைந்தார்.

👉1942 – இரண்டாம் உலகப் போர்: போர்க்காலத் தேவைக்காக அமெரிக்காவில் பெட்ரோல் பங்கீட்டு அடிப்படையில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

👉1942 – பெரும் இன அழிப்பு: போலந்து, வார்சாவில் இருந்து யூதர்களின் நாடுகடத்தல் ஆரம்பமானது.

👉1943 – இரண்டாம் உலகப் போர்: நேச நாடுகளின் சிசிலியப் படையெடுப்பு: நேச நாடுகள் பலெர்மோவைக் கைப்பற்றின.

👉1944 – போலந்தின் தேசிய விடுதலைக்கான குழு நாட்டில் சீர்திருத்தங்களையும், நாட்சிகளுக்கெதிரான போரை முன்னெடுத்துச் செல்லவும், தொழிற்சாலைகளை தேசிய மயமாக்கும் திட்டத்தையும் அறிவித்தது. போலந்தில் கம்யூனிச ஆட்சி ஆரம்பமானது.

👉1946 – எருசலேமில் கட்டளைப் பலத்தீனின் நிர்வாக மையம் அமைந்திருந்த கட்டடத்தில் சியோனிஸ்டுகள் குண்டுத் தாக்குதல் நடத்தியதில் 91 பேர் கொல்லப்பட்டனர்.

👉1962 – நாசாவின் மரைனர் 1 விண்கலம் ஏவப்பட்டு சில நிமிடங்களில் கட்டுக்கடங்காமல் சென்றதால் அது அழிக்கப்பட்டது.

👉1963 – முடிக்குரிய குடியேற்றமான சரவாக் சுயாட்சி பெற்றது. இதே ஆண்டு செப்டம்பர் 16 இல் இது மலேசியக் கூட்டமைப்பில் சேர்த்துக் கொள்ளப்பட்டது.

👉1976 – இரண்டாம் உலகப் போரின் போது பிலிப்பீன்சில் சப்பான் இழைத்த போர்க் குற்றங்களுக்கான இழப்பீட்டை சப்பான் முழுமையாகச் செலுத்தியது.

👉1977 – சீனத் தலைவர் டங் சியாவுபிங் மீண்டும் ஆட்சிக்கு வந்தார்.

👉1983 – போலந்தில் இராணுவச் சட்டம் அதிகாரபூர்வமாகத் திரும்பப் பெறப்பட்டது.

👉1992 – மெதெயின் அருகே, கொலம்பியாவின் போதைப்பொருள் கடத்தல்காரர் பப்லோ எசுகோபர் சிறையில் இருந்து தப்பினார்.

👉1999 – விண்டோஸ் லைவ் மெசன்ஜர் மைக்ரோசாப்டினால் வெளியிடப்பட்டது.

👉2003 – ஈராக்கில் சதாம் உசேனின் புதல்வர்கள் குவாசி, உதய் இருவரும் அமெரிக்க இராணுவத்தினரால் கொல்லப்பட்டனர். இவர்களுடன் சதாமின் 14-வயதுப் பேரனும் கொல்லப்பட்டான்.

👉2009 – 21ம் நூற்றாண்டின் மிக நீண்ட சூரிய கிரகணம் நிகழ்ந்தது. வட இந்தியா, நேபாளம், வங்காள தேசம் போன்ற இடங்களில் முழு கிரகணம் ஏற்பட்டது.

👉2011 – நோர்வேயில் இரண்டு தீவிரவாதத் தாக்குதல்கள் இடம்பெற்றன. மொத்தம் 77 பேர் கொல்லப்பட்டனர்.

👉2013 – சீனாவில் டிங்கி என்ற இடத்தில் இடம்பெற்ற நிலநடுக்கங்களில் 89 பேர் உயிரிழந்தனர்.


இன்றைய தின பிறப்புகள்.


👉1559 – பிரின்டிசி நகர லாரன்சு, இத்தாலியப் புனிதர் (இ. 1619)

👉1647 – மார்கரெட் மரி அலக்கோக், பிரான்சியப் புனிதர் (இ. 1690)

👉1784 – பிரீட்ரிக் வில்கெல்ம் பெசல், செருமானிய கணிதவியலாளர், வானியலாளர் (இ. 1846)

👉1904 – தொ. மு. பாஸ்கர தொண்டைமான், தமிழறிஞர், எழுத்தாளர் (இ. 1965)

👉1915 – வாணிதாசன், புதுவைக் கவிஞர் (இ. 1974)

👉1921 – எஸ். டி. சுந்தரம், தமிழக எழுத்தாளர், நாடகாசிரியர், நடிகர், திரைப்பட இயக்குநர் (இ. 1979)

👉1923 – முக்கேஷ், இந்தியப் பாடகர் (இ. 1976)

👉1933 – ஸ்ரீதர், தென்னிந்தியத் திரைப்பட இயக்குனர், வசனகர்த்தா (இ. 2008)

👉1937 – வசந்த் ரஞ்சானே, இந்தியத் துடுப்பாளர் (இ. 2011)

👉1943 – மசாரு இமோடோ, சப்பானிய செயற்பாட்டாளர், எழுத்தாளர் (இ. 2014)

👉1944 – ஆனந்த் சத்தியானந்த், நியூசிலாந்தின் 19வது ஆளுநர்.

👉1947 – ஜில்ஸ் டுசப், கனடிய அரசியல்வாதி.

👉1948 – அல்போன்சோ கனோ, கொலம்பிய மார்க்சியவாதி (இ. 2011)

👉1953 – எஸ். பி. சைலஜா, தென்னிந்தியத் திரைப்படப் பாடகி.

👉1970 – தேவேந்திர பத்னாவிசு, மகாராட்டிராவின் 18வது முதலமைச்சர்.

👉1982 – தில்ருவன் பெரேரா, இலங்கை துடுப்பாட்ட வீரர்.

👉1983 – நுவன் குலசேகர, இலங்கைத் துடுப்பாட்ட வீரர்.

👉1992 – செலெனா கோமஸ், அமெரிக்க நடிகை, பாடகி.

👉1996 – சகிளீர் கிசோண்டோ, அமெரிக்க நடிகர்.

👉2013 – கேம்பிரிட்ஜ் இளவரசர் ஜோர்ஜ்.


இன்றைய தின இறப்புகள்.


👉1619 – பிரின்டிசி நகர லாரன்சு, இத்தாலியப் புனிதர் (பி. 1559)

👉1676 – பத்தாம் கிளமெண்ட் (திருத்தந்தை) (பி. 1590)

👉1826 – கியூசெப்பே பியாசி, இத்தாலியக் கணிதவியலாளர், வானியலாளர் (பி. 1746)

👉1832 – பிரான்சின் இரண்டாம் நெப்போலியன் (பி. 1811)

👉1967 – கார்ல் சாண்ட்பர்க், அமெரிக்க எழுத்தாளர் (பி. 1878)

👉1968 – முத்துலட்சுமி ரெட்டி, இந்தியாவின் முன்னோடிப் பெண் மருத்துவர், சமூகப் போராளி (பி. 1886)

👉1972 – டி. எஸ். பாலையா, தமிழகத் திரைப்பட நடிகர் (பி. 1914)

👉1995 – சிவகுமார் ராய், இந்திய எழுத்தாளர் (பி. 1919)

👉1996 – நாரண. துரைக்கண்ணன், தமிழக்ப் பத்திரிகையாளர், எழுத்தாளர் (பி. 1906)

👉2012 – டொன் பொஸ்கோ, இலங்கையின் நாடக, திரைப்பட நகைச்சுவை நடிகர்.

👉2013 – தங்கராஜ், தமிழ்த் திரைப்பட நடிகர்.

👉2015 – அ. செ. இப்ராகிம் இராவுத்தர், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்.

👉2020 – கோவை ஞானி, தமிழக எழுத்தாளர், மார்க்சியத் திறனாய்வாளர் (பி. 1935)


இன்றைய தின சிறப்பு நாள்.


👉பை நாள்புரட்சி நாள் (காம்பியா)

👉மகதலேனா மரியாள் திருவிழா நாள்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.