நடிகர் திலீப் குமார் காலமானார்.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 


நடிகர் திலீப் குமார் காலமானார்.

புகழ்பெற்ற ஹிந்தி திரைப்பட நடிகர் திலீப் குமார் உடல்நலக்குறைவால் மும்பையில் இன்று (ஜூலை 7) காலமானார்.

 அவருக்கு வயது 98. இதன்படி ,கடந்த ஜூன் 29-ம் திகதி சுவாசக் கோளாறு காரணமாக நடிகா் திலீப் குமாா் (98) மும்பையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். 

இவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். இதனிடயே மருத்துவமனையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி நடிகர் திலீப்குமார் உயிர் இன்று பிரிந்தது. 

திலீப் குமாருக்கு மோடி, ராகுல் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இரங்கல் முகமது யூசூப் கான் என்ற இயற்பெயர் கொண்ட நடிகர் திலீப்குமார் பாகிஸ்தானின் பெஷாவர் பகுதியில் 1922-ம் ஆண்டு பிறந்தவர். 1944-ம் ஆண்டு ஸ்வார் படா என்ற படம் மூலம் அறிமுகமான இவர் 65-க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்துள்ளார். 

தேவதாஸ், கங்கா யமுனா, ஆன், தஸ்தான் உள்ளிட்ட திரைப்படங்கள் இவரது நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்த திரைப்படங்களாகும். மேலும் ,திரையுலகில் சிறப்பான பங்காற்றியமைக்காக தாதா சாகேப் பால்கே விருது, பத்ம பூஷண், பத்ம விபூஷண் உள்ளிட்ட விருதுகளை பெற்றுள்ளார். 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.