தொலைக்காட்சி தொகுப்பாளர் அர்ச்சனாவுக்கு மூளையில் திடீர் அறுவை சிகிச்சை!

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀

தொலைக்காட்சி தொகுப்பாளர் அர்ச்சனாவுக்கு மூளையில் திடீர் அறுவை சிகிச்சை! 

அதிர்ச்சியில் ரசிகர்கள். பிக் பாஸ் புகழ் அர்ச்சனாவுக்கு மூளையில் இன்று அறுவைச் சிகிச்சை நடப்பதாக அவரே இன்ஸ்டாகிராமில் அறிவித்துள்ளார்.

 பிக்பாஸ் நான்காம் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டவர் அர்ச்சனா. அதற்கு முன்பு ஸீ தமிழ் தொலைக்காட்சியில் முன்னணி தொகுப்பாளராக இருந்து வந்தவர். 

பிக் பாஸுக்கு பிறகு விஜய் டிவியிலேயே நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க ஆரம்பித்தார். தற்போது அவர் சில முக்கிய ஷோக்களை தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில் அர்ச்சனா தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும், மூளையில் அறுவைச் சிகிச்சை நடைபெறப் போவதாகவும் தெரிவித்திருந்தார். 

அவரது மூளையில் Cerebrospinal fluid leak இருப்பதால், அதற்காக re-construction அறுவைச் சிகிச்சை இன்று காலை 7 மணி முதல் 11 மணி வரை நடைபெற்றது. 

மேலும் ஒரு வாரம் அவர் மருத்துவமனையில் தான் இருக்கவேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள் ளார்களாம். இதில் இருந்தும் மீண்டு வருவேன் என்றும், இதற்காக ஒரு சின்ன பிரேக் எடுத்துக்கொள்கிறேன் என்றும் ரசிகர்களிடம் கூறும் வகையில் அர்ச்சனா பதிவிட்டுள்ளார். 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.