தந்தையால் முதன்முதலில் பாலியல் துன்புறுத்தலுக்குள்ளான 15 வயதுச் சிறுமி.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀

தந்தையால் முதன்முதலில் பாலியல் துன்புறுத்தலுக்குள்ளான 15 வயதுச் சிறுமி. 

கல்கிஸ்ஸை பகுதியில் 15 வயதுச் சிறுமி இணையம் மூலம் விற்பனை செய்யப்பட்டு பல நபர்களால் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவம் இலங்கையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

இதன்படி ,குறித்த சம்பவம் தொடர்பில் இதுவரை 41 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சுமார் 7 பொலிஸ் குழுக்கள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

ஜூன் 7 ஆம் திகதி 35 வயது நபர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இந்த கொடூர செயல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. 15 வயதுச் சிறுமி மற்றும் அவரது தாயாரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் பல விடயங்கள் வெளிவரத்தொடங்கின. 

அதன் முக்கிய சந்தேகநபர் இணையதளங்களில் ஏராளமான விளம்பரங்களை வெளியிட்டுள்ளார் என்பது தெரியவந்தது. ஆரம்பத்தில், குழந்தைகள் மற்றும் பெண்கள் பணியகத்திடம் இந்த விசாரணையை ஒப்படைத்தார்.

 இதன்படி , குற்றவியல் புலனாய்வுத் துறையினரும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர், குற்ற புலனாய்வு மற்றும் தடுப்பு பிரிவு, சட்டவிரோத சொத்து மற்றும் சொத்து விசாரணை பிரிவு, பொலிஸ் போதைப்பொருள் பணியகம், மனித கடத்தல் மற்றும் கடல்சார் குற்றங்கள் விசாரணை பிரிவு, அஜித் ரோஹானா ஆகியோரின் மேற்பார்வையின் கீழ் கணினி குற்றங்கள் விசாரணை பிரிவு ஆகியவை இணைந்து விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.