வாகன விபத்துக்களில் நேற்று 10 பேர் பலி.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 

வாகன விபத்துக்களில் நேற்று 10 பேர் பலி. 


நாட்டில் நேற்றைய தினத்தில் மாத்திரம் ஏற்பட்ட வாகன விபத்துக்களில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இதில் 07 பேர் மோட்டார் சைக்கிள் விபத்துக்களில் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்தார். 

ஏனைய மூன்று பேரும் பாதசாரிகள் என அவர் தெரிவித்தார். வாகன விபத்துக்களில் அதிகரிப்பை காண முடிவதாக தெரிவித்த அவர், இந்நாட்டு வீதி அமைப்பிற்கு அமைய இது மிகவும் அதிகம் எனவும் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் சுட்டிக்காட்டினார்.

 கடந்த 2020 ஆம் ஆண்டில் 2,144 பேர் வாகன விபத்துக்களால் உயிரிழந்துள்ள நிலையில், 2019 ஆம் ஆண்டு 2,839 பேர் உயரிழந்துள்ளனர். 2021 ஆம் ஆண்டில் இதுவரை 1,266 பேர் வாகன விபத்துக்களால் உயிரிழந்துள்ள நிலையில், 7 ஆயிரத்திற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். ✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.