தீ விபத்துக்குள்ளான கப்பலால் முதற்கட்டமாக இலங்கைக்கு கிடைத்தது மூன்றரை மில்லியனுக்கும் அதிகமான அமெரிக்க டொலர்.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 


தீ விபத்துக்குள்ளான கப்பலால் முதற்கட்டமாக இலங்கைக்கு கிடைத்தது மூன்றரை மில்லியனுக்கும் அதிகமான அமெரிக்க டொலர். 

‘எக்ஸ்-பிரஸ் பேர்ல்’ கப்பல் உரிமையாளர்கள் P&I காப்பீட்டாளர்கள் மூலம், இலங்கை அரசாங்கத்திற்கு 3.6 மில்லியன் அமெரிக்க டொலரை முதற்கட்டமாக வழங்கியுள்ளது. எனினும் குறித்த கப்பலால் பாதிக்கப்பட்ட இலங்கை மீனவர்களுக்கு நட்டஈட்டை வழங்க 700 மில்லியன் ரூபாய் தேவை என இலங்கை உரிமை கோரியுள்ளது.

 இதை செலுத்துவது தொடர்பில் முறையான ஆய்வுகள் நடந்து வருவதாகவும், அனைத்து உரிமைகோரல்களும் பரிசீலிக்கப்படும் என்றும் கப்பல் உரிமையாளர்கள் கூறினர். 

மேலும், கப்பல் சிதைந்த இடத்தில் உள்ள குப்பைகளை அகற்றவும், கண்காணிப்பு நடவடிக்கைகளுக்கு உதவுவதற்கும், தினசரி அனுப்பப்படும் ட்ரோன்களின் முறைப்பாடுகளுக்கு பதிலளிக்க 24 மணிநேர கண்காணிப்பில் பராமரிப்பாளர்கள் இருக்கிறார்கள் என்றும் கப்பல் உரிமையாளர்கள் தெரிவித்தனர். 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.