கல்கிஸை சிறுமியை விளம்பரப்படுத்திய இணையத்தள உரிமையாளரின் கணக்கில் 5 கோடி ரூபா.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 

கல்கிஸை சிறுமியை விளம்பரப்படுத்திய இணையத்தள உரிமையாளரின் கணக்கில் 5 கோடி ரூபா. 


கல்கிஸையில் 15 வயது சிறுமி, இணையத்தளம் மூலம் விளம்பரப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. 

குறித்த விளம்பரத்தை வெளியிட்ட இணையத்தள உரிமையாளரின் வங்கிக் கணக்கில் 5 கோடி ரூபா பணம் வைப்பிலிடப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது. 

அத்துடன், இந்தச்சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் 11 பேரின் வங்கிக் கணக்கிலுள்ள 10 கோடி ரூபாவை முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில், சட்டவிரோத சொத்துகள் மற்றும் உடமைகள் விசாரணைப் பிரிவு தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொள்கிறது.

 இந்த நிலையில், சிறுவர் துஷ்பிரயோகங்கள் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள காவல்துறை பேச்சாளர், இதுபோன்ற சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு, சந்தேகநபர்களைக் கைதுசெய்வது காவல்துறையினரின் கடமையாகும் எனக் குறிப்பிட்டுள்ளார். 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.