சினிமா வாழ்க்கை மற்றும் சொந்த வாழ்க்கை இரண்டையும் பிரித்து பார்க்க எனக்கு தெரியவில்லை-

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 

சினிமா வாழ்க்கை மற்றும் சொந்த வாழ்க்கை இரண்டையும் பிரித்து பார்க்க எனக்கு தெரியவில்லை-


அமலாபால் பகிர்ந்த வாழ்க்கை அனுபவம் அமலாபால் தமிழ், மலையாளம், தெலுங்கு பட உலகில் முன்னணி நடிகையாக இருக்கிறார்.

 அவரது திருமண வாழ்க்கை விவாகரத்தில் முடிந்தது இந்த நிலையில் சினிமா மற்றும் வாழ்க்கை அனுபவங்கள் குறித்து அவர் கூறியதாவது:- “நான் 17 வயதில் சினிமா துறைக்கு வந்தேன். சொந்த வாழ்க்கையில் சந்தித்த விஷயங்களை சினிமா வாழ்க்கையிலும் பார்த்தேன். 

சினிமா வாழ்க்கை மற்றும் சொந்த வாழ்க்கை இரண்டையும் பிரித்து பார்க்க எனக்கு தெரியவில்லை. 2019 வரை அப்படித்தான் இருந்தேன்.

ஆனால் 2020-ம் ஆண்டு எனது வாழ்க்கையை புரட்டிப்போட்டது. அந்த வருடம்தான் எனது தந்தை மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு பிறகுதான் என்னை நானே சுயபரிசோதனை செய்ய ஆரம்பித்தேன்.

 அப்போதுதான் எனது சொந்த வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம் போல் இருப்பதையும், எனக்கென்று தனிப்பட்ட வாழ்க்கை இல்லாமல் இருப்பதையும், வாழ்க்கை தவறாக புரிந்து கொள்ளப்பட்டு இருப்பதையும் உணர ஆரம்பித்தேன். 

திரும்பி பார்க்கையில் மோசமாக உணர்கிறேன்.தற்போது எனது சொந்த வாழ்க்கையையும், சினிமா வாழ்க்கையையும் பிரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். அனைவரும் தங்கள் வாழ்க்கையில் அடுத்தடுத்த கட்டங்களுக்கு போய் இருக்கிறார்கள்.’’ இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 ✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.