ஓட்டம் எடுப்பதற்காக ஓடிய வேளை விழுந்து காயமடைந்த வீரர் - ஆட்டமிழக்கச்செய்யவேண்டாம் என சக வீரர்களை கேட்டுக்கொண்ட

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 


ஓட்டம் எடுப்பதற்காக ஓடிய வேளை விழுந்து காயமடைந்த வீரர் - ஆட்டமிழக்கச்செய்யவேண்டாம் என சக வீரர்களை கேட்டுக்கொண்ட

 ஜோரூட் ஓட்டம் எடுக்கும்போது விழுந்து காயமடைந்த வீரரை ஆட்டமிழக்க செய்யவேண்டாம் என ஜோ ரூட் சகவீரர்களை கேட்டுகொண்ட சம்பவம் இங்கிலாந்தில் இடம்பெற்ற போட்டியொன்றில் இடம்பெற்றுள்ளதுடன் கிரிக்கெட் ரசிகர்கள் பலரின் மனதை தொட்டுள்ளது. 

ரி20 போட்டியொன்றின் போது லங்கஷயர் அணியின் துடுப்பாட்ட வீரர் ஸ்டீபன் குரொவ்ட் ஓட்டம் எடுப்பதற்காக ஒடியவேளை விழுந்து காயமடைந்தவேளையே ரூட் அவரை ஆட்டமிழக்க செய்யவேண்டாம் என தனது யோர்க்சயர் அணியின் சகவீரர்களை கேட்டுக்கொண்டுள்ளார். 

குரொவ்ட் காயம்காரணமாக அவதிப்படுவதை பார்த்த ரூட் அவரை ஆட்டமிழக்க செய்யவேண்டாம் என சகவீரர்களை கேட்டுக்கொண்டுள்ளார். 18 ஓவரில் இந்தசம்பவம் இடம்பெற்றுள்ளது லுயுக்வெல்ஸ் மிட்ஓவ் திசைக்கு பந்தை அடித்துவிட்டு ஓடுவதற்கு முயற்சி செய்துள்ளார். 

முதலில் ஓட தயங்கிய குரொவ்ட் பின்னர் ஓட ஆரம்பித்தவேளை விழுந்துள்ளார். ஜோ ரூட்டும் சகவீரர்களும் உடனடியாக அவருக்கு அருகில் சென்று அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதா என பார்த்ததுள்ளனர். இந்த சம்பவம் குறித்து வர்ணணையாளர்கள் மத்தியில் மாறுபட்டகருத்து காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

ரொப் கீ ரூட்டின் முடிவை ஆதரித்துள்ள அதேவேளை மார்க் புச்சர் இந்த விடயம் முற்றிலும் வினோதமானதாக காணப்பட்டது என தெரிவித்துள்ளார். பின்னர் இது குறித்து கருத்து தெரிவித்த ரூட் இது நெருக்கடியான சூழ்நிலையில் மிகவும் கடினமான முடிவு, முதலில் குரொவ்ட் கடும் காயமடைந்துள்ளார் போல தோன்றியது அவருக்கு கடும் காயங்கள் ஏற்படவில்லை என்பது நிம்மதியான விடயம்,என தெரிவித்துள்ளார். 

இறுதியில் லங்கஷயர் அணி வெற்றிபெற்றதும் குரொவ் ஆட்டமிழக்காமல் 26 ஓட்டங்களை பெற்றதும் குறிப்பிடத்தக்கது. 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.