மேலும் 20 இலட்சம் சைனோபாம் தடுப்பூசிகள் நாட்டை வந்தடைந்தன.
𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀
மேலும் 20 இலட்சம் சைனோபாம் தடுப்பூசிகள் நாட்டை வந்தடைந்தன.
மேலும் 20 இலட்சம் சைனோபாம் தடுப்பூசிகள் இன்று அதிகாலை நாட்டை வந்தடைந்துள்ளன. தேசிய மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தினால் சீனாவிடமிருந்து கொள்வனவு செய்யப்பட்ட தடுப்பூசிகளே இவ்வாறு நாட்டை வந்தடைந்துள்ளன.
இந்த தடுப்பூசிகளுடன் நாட்டை வந்தடைந்ததன் பின்னர் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட மொத்த சைனோபாம் தடுப்பூசிகளின் எண்ணிக்கை 91 இலட்சமாக அதிரிக்கும் என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன நேற்று தெரிவித்தார்.
இதேவேளை, இன்றைய தினம் நாட்டை வந்தடைந்த 20 இலட்சம் சைனோபாம் தடுப்பூசிகளில், குருணாகல் மாவட்டத்துக்கு 4 இலட்சம் தடுப்பூசிகளும், காலி மாவட்டத்துக்கு 275,000 தடுப்பூசிகளும், மாத்தறை, பதுளை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு தலா 2 இலட்சம் தடுப்பூசிகளும் வழங்கப்படவுள்ளன.
அவ்வாறே, குறித்த சைனோபாம் தடுப்பூசிகளில் புத்தளம், பொலனறுவை, நுவரெலியா, மொனராகலை, அம்பாறை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களுக்கு தலா ஒரு இலட்சம் தடுப்பூசிகளும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்துக்கு 125, 000 தடுப்பூசிகளும் வழங்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்தார். ✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.