வேலைக்கு அமர்த்தும் வயதெல்லையை 18 வரை அதிகரிக்க தீர்மானம் -

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 


வேலைக்கு அமர்த்தும் வயதெல்லையை 18 வரை அதிகரிக்க தீர்மானம் - 

சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தொழிலுக்கு ஈடுபடுத்தும் வயதெல்லையை 18 வரை அதிகரிப்பதற்கு தற்போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. அதன்படி , இந்த வயதெல்லையை அதிகரிப்பதற்கான திருத்தத்தை எதிர்வரும் 2 மாதங்களில் பாராளுமன்றத்தில் முன்வைக்க எதிர்பார்த்துள்ளதாக சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவிக்கின்றது. 

1956ம் ஆண்டு 47ம் இலக்க சட்டத்திற்கு அமைய 14 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களை வேலைக்கு அமர்த்த முடியும் என கூறப்பட்டது. இருப்பினும் , கடந்த ஜனவரி மாதம் 18ம் திகதி முதல் 16 வயதுக்கு மேற்பட்ட சிறார்களை பணிக்கு அமர்த்த முடியும் என அறிவிக்கப்பட்டிருந்தது. 

16 வயதுக்கு மேற்பட்டவர்களை வீட்டு பணிக்காக அமர்த்த முடியும் என கூறப்படுகின்றது. மேலும் ,இந்த நிலையில், தற்போது அந்த வயததெல்லையை 18 வயது வரை அதிகரிக்க தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

 ✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.