சீனி, பருப்பு, தேங்காய் எண்ணெய், வெங்காயம், கிழங்கு போன்றவற்றை அரசாங்கமே நேரடியாக இறக்குமதி செய்யும்.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 


சீனி, பருப்பு, தேங்காய் எண்ணெய், வெங்காயம், கிழங்கு போன்றவற்றை அரசாங்கமே நேரடியாக இறக்குமதி செய்யும். 

நாட்டுக்குத் தேவையான அத்தியாவசிய உணவுப்பொருட்களை அரசாங்கம் அரச நிறுவனம் ஒன்றினூடாக நேரடியாக இறக்குமதி செய்வதற்கு தீர்மானித்துள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

 இதுவரை தனியார்துறை வர்த்தகர்கள் மூலமே பெருமளவு அத்தியாவசிய உணவுப்பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதையடுத்து தற்போது அரசாங்கம் நேரடியாக அத்தியாவசிய உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு தீர்மானித்துள்ளதாகவும் வர்த்தக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

 அது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள வர்த்தக அமைச்சர்,சந்தையில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரித்து வரும் இத் தருணத்தில் தனியார் துறை வர்த்தகர்களின் ஏகாதிபத்தியத்தை மட்டுப்படுத்தும் வகையிலேயே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

 அதன்படி அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலுள்ள அரச வணிக கூட்டுறவு மொத்த விற்பனை நிறுவனத்தை மீள பலப்படுத்தி அந்த நிறுவனத்தின் மூலம் அத்தியாவசிய உணவுப் பொருட்களை இறக்குமதி செய்ய தீர்மானித்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.