மேலும் சில பகுதிகள் விடுவிப்பு.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀


 மேலும் சில பகுதிகள் விடுவிப்பு.

நாட்டில் மேலும் பல மாவட்டங்களைச் சேர்ந்த சில கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

 அதனடிப்படையில் கேகாலை, இரத்தினபுரி, காலி, முல்லலைத்தீவு, மொனராகலை ஆகிய ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த 6 கிராம சேவகர் பிரிவுகள் இன்று(26) அதிகாலை 6 மணி முதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். 

இதற்கமைய முல்லைத்தீவு மாவட்டத்தில், செம்மலை கிழக்கு கிராம சேவகர் பிரிவின் நாயாறு மீன்பிடி பகுதி தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது. 

கேகாலை மாவட்டத்தில், மல்விட்ட கிராம சேவகர் பிரிவின் கோலிந்தவத்த இலக்கம் 3ஆம் பிரிவும், இரத்தினபுரி மாவட்டத்தில் பரகல கிராம சேவகர் பிரிவும் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன. 

காலி மாவட்டத்தில், பழைய கொலனி கிராம சேவகர் பிரிவின் திவித்துர தோட்டமும், மொனராகலை மாவட்டத்தில், ஹிந்திகிவ்ல கிழக்கு கிராம சேவகர் பிரிவின் நக்கலவத்த கிராமமும், மில்லகெலவத்த கிராமமும் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன. 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.