A/L & புலமைப் பரிசில் பரீட்சைகள் தொடர்பில் இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 

A/L & புலமைப் பரிசில் பரீட்சைகள் தொடர்பில் இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு.

கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை மற்றும் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கான புலமைப் பரிசில் பரீட்சை ஆகியவற்றை நடத்துவதற்கு ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட தினங்களில் இதுவரையில் எவ்வித மாற்றங்களும் செய்யப்படவில்லை. 

இது குறித்த கலந்துரையாடல்களும் முன்னெடுக்கப்படவில்லை என்று இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் நாயகம் பிரணவதாசன் தெரிவித்தார். 

எதிர்வரும் நவம்பரில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள பரீட்சைகள் தொடர்பில் வினவிய போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் , பரீட்சைகளை நடத்துவதற்கு ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட திகதிகளில் இதுவரையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. 

கல்விப் பொதுத் தராதர சாதாரண மாணவர்களுக்கான செயன்முறை பரீட்சைகளை நடத்துவது குறித்து அவதானம் செலுத்தப்பட்டு வருகிறது. எனினும் கல்வி அமைச்சு மட்டத்திலான தீர்மானத்தின் பின்னரே இது குறித்து அறிவிக்கப்படும் என்றார். 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇 https://api.whatsapp.com/send?phone=94715505714&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.